நெல்லை மாவட்டத்தில் திருவள்ளுவர் பிறந்த தினத்தை முன்னிட்டு மது விற்ற 57 பேர் கைது

நெல்லை மாவட்டத்தில் திருவள்ளுவர் பிறந்த தினத்தை முன்னிட்டு மதுபானங்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்ற 57 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 2 ஆயிரத்து 667 மதுப்பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
நெல்லை மாவட்டத்தில் திருவள்ளுவர் பிறந்த தினத்தை முன்னிட்டு மது விற்ற 57 பேர் கைது
Published on

நெல்லை:

தமிழகம் முழுவதும் திருவள்ளுவர் பிறந்த தினத்தை முன்னிட்டு நேற்று மதுக்கடைகள் மற்றும் பார்களை அடைக்க உத்தர விடப்பட்டிருந்தது. இதனால் அனைத்து மதுக்கடைகள், பார்கள் மூடப்பட்டன. 

நெல்லை மாவட்டத்திலும் அனைத்து மதுக்கடைகள், பார்கள் மூடப்பட்டிருந்தது. ஆனாலும் மதுக்கடை, பார் அருகே சிலர் மதுபானங்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்தனர். இவர்களை போலீசார் கைது செய்தனர். நெல்லை மாநகர் பகுதியில் மட்டும் நேற்று மது விற்றதாக 19 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அதில் 20 பேர் கைது செய்யப்பட்டனர். 

இவர்களிடம் இருந்து மொத்தம் 2100 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. நெல்லை புறநகர் பகுதியில் தடையை மீறி மது விற்றதாக 37 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 37 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து 567 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மொத்தம் மாவட்டம் முழுவதும் 57 பேர் கைது செய்யப்பட்டு 2667 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com