திருவையாறில் வீட்டு பராமரிப்பு பணியின்போது தவறி விழுந்து வாலிபர் பலி

திருவையாறில் வீட்டு பராமரிப்பு பணியின்போது தவறி விழுந்து வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவையாறில் வீட்டு பராமரிப்பு பணியின்போது தவறி விழுந்து வாலிபர் பலி
Published on

திருவையாறு:

திருவையாறு காமராஜ் நகரை சேர்ந்தவர் திலகர். இவரது வீட்டு கட்டுமானப்பணியில் சடையாண்டிதோப்புவை சேர்ந்த முருகன் (வயது 25). இவர் வெல்டிங் வேலை செய்துள்ளார். அப்போது சாளரம் பகுதியில் இருந்து தவறி கீழே விழுந்ததில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதில் அருகில் வேலை செய்த காமராஜர் நகரை சேர்ந்த சிவக்குமார் (31) என்பவரும் படுகாயம் அடைந்துள்ளார். அவரை உடனடியாக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த திருவையாறு போலீசார் சென்று முருகன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவையாறு அரசு மருத்துவ மனைக்கு அனுப்பிவைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com