திருத்துறைப்பூண்டி அருகே கஜா புயலால் பாதிப்பால் தென்னை விவசாயி மாரடைப்பால் மரணம்

திருத்துறைப்பூண்டி அருகே கஜா புயலால் பாதிப்பால் தென்னை விவசாயி மாரடைப்பால் மரணம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #Gajastorm
திருத்துறைப்பூண்டி அருகே கஜா புயலால் பாதிப்பால் தென்னை விவசாயி மாரடைப்பால் மரணம்
Published on

திருத்துறைப்பூண்டி:

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி குரும்பல் கிராமம் ரயிலடி தெற்கு தெருவை சேர்ந்தவர் வீரரவி (வயது52). இவருக்கு மரகதவள்ளி (43) என்ற மனைவியும், துர்காதேவி(23), கார்த்திகா(19) என்ற 2 மகள்கள் உள்ளனர்.

வீரரவிக்கு சொந்தமாக உள்ள கொல்லையில் 40-க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் உள்ளன.

இந்த நிலையில் கடந்த 16-ந் தேதி அன்று கஜா புயலில் வீரரவியின் 20-க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் விழுந்துள்ளது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட வீர ரவி தனதுகுடும்பத்தினரிடமும், உறவினர்களிடமும் புலம்பி உள்ளார்.

இந்த நிலையில் தென்னை மரங்கள் போய் விட்டதே. இனி என்ன செய்ய போகிறேன் என்று தெரிய வில்லையே என்று வீரரவி வேதனையில் இருந்து வந்தார். இதையடுத்து அவர் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார்

இதனால் அவரது குடும்பத்தினர் மற்றும் அப்பகுதி சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

கஜா புயலால் பாதிக்கப்பட்டு தஞ்சை மாவட்டத்தை 2 தென்னை விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். தற்போது திருவாரூர் மாவட்டத்தில் தென்னை விவசாயி மாரடைப்பால் இறந்த சம்பவம் டெல்டா மாவட்ட விவசாயிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. #Gajastorm

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com