திருமருகல் அருகே மின்சாரம் தாக்கி மின் ஊழியர் பலி

திருமருகல் அருகே மின்சாரம் தாக்கி மின் ஊழியர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மின்சாரம் தாக்கி பலி
மின்சாரம் தாக்கி பலி
Published on

திருமருகல் ஒன்றியம் ஏர்வாடி ஆற்றங்கரை தெருவை சேர்ந்தவர் வீரமணி(வயது 52). இவர் திருமருகல் துணை மின்நிலையத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார்.

இந்தநிலையில் வீரமணி நேற்று மானாம்பேட்டை-தென்பிடாகை சாலையில் உள்ள மின்மாற்றியில் பழுது பார்த்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் தாக்கியது. இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருமருகல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே வீரமணி பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த திட்டச்சேரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வீரமணியின் உடலை கைப்பற்றி நாகை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த வீரமணிக்கு தங்கம் (45) என்ற மனைவியும், மனோஜ்(24), மனோபாலா(22) என்ற மகன்களும், மனோன்மணி(18) என்ற மகளும் உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com