திருமங்கலம் பகுதியில் ஏ.டி.எம்.களில் நிரப்ப கொண்டு சென்ற ரூ.1¼ கோடி பறிமுதல்

திருமங்கலம் பகுதியில் ஏ.டி.எம்.களில் நிரப்ப கொண்டு சென்ற ரூ.1¼ கோடியை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். #Parliamentelection #LSPolls
திருமங்கலம் பகுதியில் ஏ.டி.எம்.களில் நிரப்ப கொண்டு சென்ற ரூ.1¼ கோடி பறிமுதல்
Published on

பேரையூர்:

மதுரை மாவட்டம், திருமங்கலத்தை அடுத்த மேலக்கோட்டை பகுதியில் தேர்தல் கண்காணிப்பு குழு அதிகாரிகள் வாகன சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அந்த வழியாக திருமங்கலம் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள ஏ.டி.எம்.களில் பணம் நிரப்புவதற்காக தனியார் நிறுவன வாகனம் வந்தது.

வாகனத்தில் இருந்தவர்களிடம் உள்ள ஆவணங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அந்த ஆவணத்தில் உள்ள எண்ணும், வேனின் பதிவு எண்ணும் வித்தியாசமாக இருந்தது.

இதைத்தொடர்ந்து வேனில் கொண்டு வரப்பட்ட ரூ.1 கோடியே 35 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட வேனும், பணமும் திருமங்கலம் தாசில்தார் தனலட்சுமியிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர் அந்த பணத்தை திருமங்கலம் கருவூலத்தில் ஒப்படைத்தார்.  #Parliamentelection #LSPolls

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com