

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே சவுர பஜார் பகுதியில் நேற்று இரவு தசரா விழா கோலகமால கொண்டாடப்பட்டது. அப்போது ராவணனின் கொடும்பாவியை எரிக்கும் நிகழ்ச்சியின் போது, எதிர்ப்பாராதவிதமாக ஏற்பட்ட ரெயில் விபத்தில் 61 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் உயிரிழப்புகள் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
இந்த விபத்துக்கான காரணங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வரும் நிலையில், நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த காங்கிரஸ் கட்சியினர் மீதும், நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்துவின் மனைவி மீதும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.
நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை எனவும், விபத்து நடைபெற்ற போது, அமைச்சரின் மனைவி உடனடியாக அங்கிருந்து வெளியேறியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.