தேனியில் வீட்டை விட்டு வெளியே சென்ற சிறுவன் மாயம்

தேனியில் வீட்டை விட்டு வெளியே சென்ற சிறுவன் மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனியில் வீட்டை விட்டு வெளியே சென்ற சிறுவன் மாயம்
Published on

தேனி:

தேனி பாரஸ்ட் ரோடு 3-வது தெருவை சேர்ந்தவர் சேகர். அவரது மகன் முத்தையா (வயது15). படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு கூலி வேலைக்கு சென்று வந்தான். சம்பவத்தன்று வீட்டை விட்டு வெளியே சைக்கிளில் சென்று உள்ளான். அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சி அடைந்த பெற்றோர் தனது மகனை உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடி பார்த்தனர். எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதனால் பதறிபோன சேகர் தேனி போலீசில் புகார் செய்தார்.

போலீசார் வழக்குபதிவு செய்து சிறுவன் என்ன ஆனான்? பணத்துக்காக கடத்தப்பட்டானா? எங்கு சென்றான்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com