தேனி அருகே வீரபாண்டி கோவிலுக்கு வந்த பக்தர் விபத்தில் பலி

தேனி அருகே வீரபாண்டி கோவிலுக்கு வந்த பக்தர் ஆட்டோவில் இருந்து தவறி விழுந்து பலியானார்.
தேனி அருகே வீரபாண்டி கோவிலுக்கு வந்த பக்தர் விபத்தில் பலி
Published on

தேனி:

தேனி அருகே போடி டி.வி.கே.கே. நகர் பகுதியைச் சேர்ந்தவர் புளுகுசாமி. இவர் அதே பகுதியைச் சேர்ந்த செல்வக் குமார், தர்மராஜ், மாரியம்மாள் உள்பட சிலருடன் வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில் திருவிழாவுக்கு சென்றனர். நேர்த்திக்கடன் செலுத்தி விட்டு மீண்டும் ஆட்டோவில் ஊர் திரும்பிக் கொண்டு இருந்தனர். தோப்புப்பட்டி அருகே வந்த போது ஆட்டோவில் இருந்து புளுகுசாமி தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து பழனிசெட்டிபட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சின்னமனூர் முத்தாலம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் செல்வன் (வயது 38). பர்னிச்சர் கடை நடத்தி வந்தார். சம்பவத்தன்று வசூல் செய்ய சின்னமனூர் மெயின் ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அவ்வழியே வந்த கார் பயங்கரமாக மோதியது.

இதில் படுகாயமடைந்த செல்வன் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து சின்னமனூர் போலீசார் கார் டிரைவர் புலிக்குத்தியைச் சேர்ந்த மணிமுத்து மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com