கோவை கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவம் - பயிற்சியாளருக்கு 13 நாள் நீதிமன்ற காவல்

கோவை மாவட்டத்தில் தனியார் கல்லூரியில் பேரிடர் மீட்பு பயிற்சியின் போது மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பயிற்சியாளருக்கு 13 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. #Kovai
கோவை கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவம் - பயிற்சியாளருக்கு 13 நாள் நீதிமன்ற காவல்
Published on

கோவை:

கோவையில் உள்ள தனியார் கல்லூரி பேரிடர் மேலாண்மை பயிற்சியின்போது லோகேஸ்வரி என்ற மாணவி உயிரிழந்தார். இது தொடர்பாக பயிற்சியாளர் ஆறுமுகம் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்து இருந்தது. அதுமட்டுமன்றி, உயிரிழந்த மாணவியின் குடும்பத்துக்கு 5 லட்சம் நிதி வழங்கப்படும் எனவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக விளக்கம் அளித்த உள்துறை அமைச்சகம், பயிற்சியாளருக்கு முறையான அங்கீகாரம் வழங்கப்படவில்லை எனக்கூறி அவர் ஒரு போலி பயிற்சியாளர் என்பதை வெளிச்சத்துக்கு கொண்டுவந்தது. மேலும் பல்வேறு கல்லூரிகளில் பேரிடர் மேலாண்மை பயிற்சிக்காக அவர் 2.5 கோடி ரூபாய் வரை வசூலித்திருப்பதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட போலி பயிற்சியாளர் ஆறுமுகத்திடம் போலீசார் விசாரணை நடத்தியபிறகு இன்று கோவை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து, அவரை 13 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #Kovai

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com