அர்ச்சகர்கள் தெய்வீகமாக பணியாற்றவில்லை - உயர்நீதிமன்றம் கருத்து

மைலாப்பூர் சிலை கடத்தல் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள நீதிபதிகள் அர்ச்சகர்கள் தெய்வீகமாக பணியாற்றவில்லை என தெரிவித்துள்ளனர். #ChennaiHC
அர்ச்சகர்கள் தெய்வீகமாக பணியாற்றவில்லை - உயர்நீதிமன்றம் கருத்து
Published on

சென்னை:

சென்னை மைலாப்பூரில் உள்ள கோவிலில் இருந்து சிலை காணாமல் போனது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதையடுத்து காணாமல் போன மயில் சிலைக்கு பதிலாக புதிய சிலை வைத்து குடமுழுக்கு நடத்தக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அடங்கிய அமர்வு, கோவிலில் சிலைகளை பாதுகாப்பதில் அர்ச்சகர்களுக்கு பொறுப்பு உண்டு என தெரிவித்துள்ளனர்.

மேலும், அர்ச்சகர்கள் தெய்வீக உணர்வுடன் பணியாற்றவில்லை என குற்றம்சாட்டிய நீதிபதிகள், இயந்திரத்தன்மையுடன் செயல்படுவதாக கருத்து தெரிவித்துள்ளனர். #ChennaiHC

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com