

திருவண்ணாமலை:
தண்டராம்பட்டு துணை மின்நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால் நாளைகாலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்டராம்பட்டு, ராதாபுரம், தாழனோடை, தென்முடியனூர் ஆகிய கிராமங்களிலும், தானிப்பாடி, சாத்தனூர், கொட்டையூர், மலையனூர் செக்கடி மற்றும் பெருங்குளத்தூர் ஆகிய துணை மின்நிலையங்களை சேர்ந்த கிராமங்களிலும் மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது. இந்த தகவலை திருவண்ணாமலை மின்வாரிய செயற்பொறியாளர் தமிழ்மணி தெரிவித்து உள்ளார்.