தாளவாடி அருகே மீண்டும் சிறுத்தை அட்டகாசம்

தாளவாடி அருகே கால்நடைகளை சிறுத்தை வேட்டையாடி வருவதால் பொது மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
சிறுத்தை அட்டகாசம்
சிறுத்தை அட்டகாசம்
Published on

தாளவாடி:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் தாளவாடி அடுத்த தொட்டகாஜனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரங்கசாமி விவசாயி இவர் 4 மாடு 3 ஆடுகள் வளர்த்து வருகிறார்.

ஆடு மற்றும் மாடுகளை கொட்டகையில் வழக்கம் போல கட்டி வைத்துதுள்ளார் காலை 7 மணியளவில் தனது ஆடு தொடர்ந்து கத்தும் சத்தம் கேட்டது. வந்து பார்த்த போது தன ஆட்டை சிறுத்தை ஒன்று கடித்து தூக்கிசென்று கொண்டிருந்தது. சத்தம் போடவே சிறுத்தை ஆட்டுடன் சேர்த்து ஒடையில் குதித்து ஓடியது. இதே போல் நேற்று அதே பகுதியை சேர்ந்த கணேசன் என்பவர் ஆட்டை சிறுத்தை கடித்து படுகாயம் ஏற்பட்டது.

இதுபற்றி தாளவாடி வனத்துறையினர்க்கு தகவல் கொடுத்தனர். வனத்துறையினர் அந்த பகுதியில் வந்து கால் தடங்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

கடந்த வாரம் ரங்கசாமி ஆட்டை சிறுத்தை கொன்றுள்ளது குறிப்பிடதக்கது. கடந்த 10 நாட்களில் மட்டும் தொட்டகாஜனூர் தோட்டத்துசாலை பகுதியில் 6 ஆடுகளை சிறுத்தை கொன்றுள்ளது.

தொடர்ந்து கால்நடைகளை சிறுத்தை வேட்டையாடி வருவதால் பொது மக்கள் பீதி அடைந்துள்ளனர். சிறுத்தை மனிதர்களை தாக்கும் முன்பு வனத்துறையினர் சிறுத்தையை கூண்டுவைத்து பிடித்து வனப்பகுதியில் விடவேண்டும் என அந்த பகுதி மக்கள் கேட்டு கொண்டுள்ளனர்.

சம்பவ இடத்தில் இன்று தாளவாடி வனச்சரகர் சிவகுமார் தலைமையில் வனஊழியர்கள் ஆய்வு செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com