செந்துறை அருகே கோவில் பூட்டை உடைத்து கொள்ளை

செந்துறை அருகே ஆயிமுத்தாயி அம்மன் கோவிலில் பூட்டை உடைத்து பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
கொள்ளை
கொள்ளை
Published on

ஆர்.எஸ்.மாத்தூர்:

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே இலங்கைச்சேரி கிராமத்தில் ஆயிமுத்தாயி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தினந்தோறும் காலை மாலை பூஜை நடைபெறுவது வழக்கம். நேற்று வழக்கம் போல் பூஜை முடிந்து பூசாரி முருகேசன்  (வயது45)  கோவிலை பூட்டி விட்டு சென்றுள்ளார். 

மறுநாள் கோவிலை திறக்க வந்துள்ளார். அப்போது கோவிலின் பூட்டு உடைந்திருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது கோவிலில் இருந்த தாம்பூலம், பித்தளையில்லான மணி, விளக்கு, கோவில் கேட்டில் உள்ள பூட்டு உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த ரொக்கம் ஆகியவை திருடு போயிருந்தது.

இது குறித்து போலீசில் புகார் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கோவிலுக்குள் புகுந்து திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com