தெலுங்கானா சட்டசபை தேர்தல் - முதல் மந்திரி சந்திரசேகர் ராவ் வேட்புமனு தாக்கல் செய்தார்

தெலுங்கானா சட்டசபை தேர்தலில் போட்டியிடும் முதல் மந்திரி வேட்பாளர் சந்திரசேகர ராவ் இன்று கஜ்வெல் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார். #TelanganaAssemblyElections #ChandrashekharRao
தெலுங்கானா சட்டசபை தேர்தல் - முதல் மந்திரி சந்திரசேகர் ராவ் வேட்புமனு தாக்கல் செய்தார்
Published on

ஐதராபாத்:

119 தொகுதிகளை கொண்ட தெலுங்கானா மாநில சட்டசபைக்கு டிசம்பர் 7-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. இங்கு ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள டி.ஆர்.எஸ். கட்சி போராடி வருகிறது.

காங்கிரஸ் கட்சி தெலுங்கு தேசம், இந்திய கம்யூனிஸ்டு கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடிக்கும் முயற்சியில் இறங்கி உள்ளது. இதேபோல் பாஜகவும் களத்தில் இருக்கிறது.

தெலுங்கானாவில் சோனியா காந்தி பிரசாரம் வரும் 22, 23-ம் தேதிகளில் பிரசாரம் செய்து காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார். இதற்கிடையே, தெலுங்கானா சட்டசபை தேர்தலில் போட்டியிடவுள்ள 65 பேர் கொண்ட முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி நேற்று வெளியிட்டது.

இந்நிலையில், தெலுங்கானா சட்டசபை தேர்தலில் கஜ்வெல் தொகுதியில் போட்டியிடும் முதல் மந்திரி வேட்பாளர் சந்திரசேகர ராவ் இன்று தனது ஆதரவாளர்களுடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். #TelanganaAssemblyElections #ChandrashekharRao

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com