வேதாரண்யம் ஆசிரியர் கொலை வழக்கில் 5 பேர் கைது

வேதாரண்யம் ஆசிரியர் கொலை வழக்கில் 5 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
வேதாரண்யம் ஆசிரியர் கொலை வழக்கில் 5 பேர் கைது
Published on

வேதாரண்யம்:

வேதாரண்யம் தாலுக்கா புஷ்பவனத்தை சேர்ந்தவர் சண்முகம் மகன் சிவகுமார் (வயது35). திருமணம் ஆகவில்லை. இவர் வெள்ளப்பள்ளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகத்தால் நியமிக்கப்பட்டு ஆசிரியர் பணியாற்றி வந்தார்.

இவர் கடந்த ஆண்டு ஜனவரி 24-ந்தேதி பள்ளி அருகே உள்ள குளத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

இதுபற்றி வேட்டைக்காரனிருப்பு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். ஆசிரியர் சிவகுமாரின் செல்போனில் இருந்த நம்பர்களையும் தொடர்பு கொண்டு விசாரணை செய்தனர். இந்நிலையில் ஆசிரியர் சிவகுமார் கொடுக்கல் வாங்கல் தகராறில் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து இதில் தொடர்புடைய வேதாரண்யம் தாலுக்கா வெள்ளப்பள்ளத்தை சேர்ந்த அகிலன்(40), கார்த்தி(29), கத்தரிப்புலத்தை சேர்ந்த அடைக்கல ராஜ்(23), அய்யப்பன்(22), நாகக் குடையான் ரகுபதி(24) ஆகிய 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி பின்னர் வேதாரண்யம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com