கடலூர் அருகே டாஸ்மாக் கடையில் கொள்ளை- மர்ம மனிதர்கள் கைவரிசை

கடலூர் அருகே டாஸ்மாக் கடையில் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடலூர் அருகே டாஸ்மாக் கடையில் கொள்ளை- மர்ம மனிதர்கள் கைவரிசை
Published on

கடலூர்:

கடலூர் முதுநகர் அடுத்த வசந்தராம்பாளையம் பகுதியில் அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் கடை உள்ளது. நேற்று இரவு விற்பனை முடிந்ததும் சூப்பர் வைசர் கோபால்சாமி மற்றும் விற்பனையாளர் பிரகாஷ் ஆகியோர் டாஸ்மாக் கடை யை மூடிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டனர்.

இன்று காலை டாஸ்மாக் கடை பூட்டு உடைக்கப்பட்டு கடை திறந்து கிடந்தது. உள்ளே இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. அந்த வழியாக சென்ற பொதுமக்கள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து கடலூர் முதுநகர் போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் டாஸ்மாக் கடை ஊழியருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் அவர்கள் வந்து பார்வையிட்டபோது டாஸ் மாக்கடையில் இருந்த ரூ.3 ஆயிரம் மதிப்பிலான மதுபாட்டில்கள் மற்றும் சுமார் 6,000 ரூபாய் பணம் ஆகியவற்றை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. 

இதுகுறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். டாஸ்மாக் கடையில் கொள்ளையடித்த மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com