மோடிக்கு ஆதரவாக பவார் பேசியதால் அதிருப்தி - தேசியவாத காங்கிரசில் இருந்து தாரிக் அன்வர் விலகல்

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளர் தாரிக் அன்வர் இன்று கட்சியில் இருந்தும் மாநிலங்களவை உறுப்பினர் பதவியில் இருந்தும் விலகினார். #TariqAnwar #NCP #RafaleDeal
மோடிக்கு ஆதரவாக பவார் பேசியதால் அதிருப்தி - தேசியவாத காங்கிரசில் இருந்து தாரிக் அன்வர் விலகல்
Published on

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் தாரிக் அன்வர். கட்சியின் நிறுவனர்களில் ஒருவரான இவர், அக்கட்சி சார்பில் மாநிலங்களவை உறுப்பினராகவும் உள்ளார். கடந்த சில தினங்களாக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் ரபேல் போர் விமான ஒப்பந்த விவகாரம் குறித்து இவருக்கும், கட்சி தலைவர் சரத் பவாருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் மோடி மீது எந்த தவறும் இல்லை என மராத்தி சேனலுக்கு சரத் பவார் அளித்த பேட்டி என்னை மிகவும் காயப்படுத்தியது. இதனால் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும், பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்தும் விலகுகிறேன்.

X

Maalai Malar
www.maalaimalar.com