ரூ.18 லட்சம் நிதியில் புதிய வகுப்பறைகள்- விஜய் வசந்த் எம்.பி திறந்து வைத்தார்

KIMS மருத்துவமனையின் அறிமுக விழாவில் விஜய் வசந்த் கலந்துக் கொண்டார்.குரு மகா சன்னிதானம் பால பிரஜாபதி அடிகளாரை சந்தித்த விஜய் வசந்த் வாழ்த்து பெற்றார்.
ரூ.18 லட்சம் நிதியில் புதிய வகுப்பறைகள்- விஜய் வசந்த் எம்.பி திறந்து வைத்தார்
Published on

கன்னியாகுமரி மாவட்டம், முளகுமூடு பேரூராட்சிக்கு உட்பட்ட கோடியூர் அரசு நடுநிலைப் பள்ளியில் புதிய வகுப்பறைகள் தேவை என்ற கோரிக்கை வைத்தனர்.

இதைதொடர்ந்து, பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.18 லட்சம் ஒதுக்கீடு செய்து அந்தப் பணிகள் நிறைவுப்பெற்றன. 

இந்நிலையில், இந்த புதிய வகுப்பறைகளை கன்னியாகுமரி மாவட்ட எம்பி விஜய் வசந்த் திறந்து வைத்தார்.

இதைதொடர்ந்து, நாகர்கோவிலில் புதியதாக ஆரம்பிக்கப்படவுள்ள KIMS மருத்துவமனையின் அறிமுக விழாவில் விஜய் வசந்த் கலந்துக் கொண்டார். 

மேலும், மிகவும் சிறப்பு வாய்ந்த இந்த மருத்துவமனை ஏழை மக்களுக்கு குறைந்த செலவில் சிகிச்சை அளிக்க முன்வர வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். 

தொடர்ந்து, ஆவணி திருவிழாவை முன்னிட்டு அய்யா வைகுண்டர் அன்புவனத்தில் குரு மகா சன்னிதானம் பால பிரஜாபதி அடிகளாரை சந்தித்த விஜய் வசந்த் வாழ்த்து பெற்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com