என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    மத்திய அமைச்சர் அமித்ஷாவின் செய்தியாளர் சந்திப்பு ரத்து?
    X

    மத்திய அமைச்சர் அமித்ஷாவின் செய்தியாளர் சந்திப்பு ரத்து?

    • சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி ஓட்டலில் செய்தியாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
    • மத்திய அமைச்சர் அமித்ஷா இன்று மாலை 4 மணிக்கு செய்தியாளர்களை சந்திப்பார் என்று கூறப்பட்டது.

    மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்றிரவு சென்னை வந்தார். இதனை தொடர்ந்து இன்று மதியம் 12 மணிஅளவில் அமித்ஷா செய்தியாளர்களை சந்திப்பார் என தெரிவிக்கப்பட்டது. இதனால் அதிமுக- பாஜக கூட்டணி தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

    பின்னர், மயிலாப்பூரில் அமைந்துள்ள ஆடிட்டர் குருமூர்த்தி இல்லத்திற்கு அமித்ஷா சென்றார். சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக குருமூர்த்தி- அமித்ஷா இருவர் மட்டுமே ஆலோசனையில் ஈடுபட்டனர். அப்போது கூட்டணி தொடர்பாக விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    இதைதெடர்ந்து, சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி ஓட்டலில் செய்தியாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. மத்திய அமைச்சர் அமித்ஷா இன்று மாலை 4 மணிக்கு செய்தியாளர்களை சந்திப்பார் என்று கூறப்பட்டது.

    இதற்காக, செய்தியாளர் சந்திப்பு அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ள எல்.இ.டி. பேனரில் நயினார் நாகேந்திரனின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. எல்.இ.டி. திரையில் ஜெ.பி.நட்டாவுக்கு அருகில் அண்ணாமலையின் புகைப்படம் இடம்பெற்றிருந்தது.

    அதனால், செய்தியாளர் சந்திப்பு அரங்கில் இதுவரை யாரும் வராததால் குழப்பம் நீடித்து வருகிறது.

    இந்நிலையில், மத்திய அமைச்சர் அமித்ஷாவின் செய்தியாளர் சந்திப்பு ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    Next Story
    ×