உதயநிதி ஸ்டாலின் கைது நடவடிக்கை வரவேற்புக்குரியது..!-பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் பெருமிதம்!

பேச்சுரிமை என்ற பெயரில் பெண்களின் கண்ணியத்தையும் மரியாதையையும் சீர்குலைப்பதை அனுமதிக்க முடியாது.
Udhayanidhi Stalin-Narayanan BJP
Published on

திமுக இளைஞரணிச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட சம்பவத்தை தமிழக பாஜகவின் மாநில செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி வரவேற்பதாகத் தெரிவித்துள்ளார்.

எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பாராட்டுப் பதிவு:

இது தொடர்பாகத் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் கருத்துப் பதிவிட்டுள்ள நாராயணன், காவல்துறையின் இந்த அதிரடி நடவடிக்கை "வரவேற்கத்தக்கது மற்றும் பாராட்டுக்குரியது" எனப் புகழ்ந்துள்ளார். தைரியமாக மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கைது நடவடிக்கையானது, இனி தமிழகத்தில் வேறு யாரும் பெண்கள் குறித்துக் கேவலமாகவும், தரக்குறைவாகவும் பேசுவதைத் தடுக்கும் அரணாக அமையும்.

பேச்சுரிமையா? பெண்களின் கண்ணியமா?:

பேச்சுரிமை என்ற பெயரில் பெண்களின் கண்ணியத்தையும் மரியாதையையும் சீர்குலைப்பதை அனுமதிக்க முடியாது. அரசியல் அந்தஸ்தை வைத்து யாரும் சட்டத்திற்கு மேல் தப்பித்துவிட முடியாது என்பதை இந்த நடவடிக்கை உணர்த்தியுள்ளது என பதிவிட்டுள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து திமுகவினர் மாநிலம் தழுவிய அளவில் சாலை மறியல் மற்றும் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் சூழலில், ஆளுங்கட்சி மற்றும் காவல்துறையின் நடவடிக்கைக்கு ஆதரவாகப் பாஜக தலைவர்கள் கருத்து தெரிவித்து வருவது தமிழக அரசியல் களத்தில் விவாதங்களை மேலும் சூடாக்கியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com