பிரதமர் நரேந்திர மோடிக்கு த.வெ.க. தலைவர் விஜய் வாழ்த்து

புதிய அரசு ஆட்சி அமைக்க குடியரசு தலைவரிடம் உரிமை கோரியது. குடியரசு தலைவர் திரவுபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
பிரதமர் நரேந்திர மோடிக்கு த.வெ.க. தலைவர் விஜய் வாழ்த்து
Published on

இந்தியாவில் உள்ள 543 மக்களவை தொகுதிகளுக்கு ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இதில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களில் வெற்றி பெற்றது. இதையடுத்து ஆட்சி அமைக்கும் பணிகளில் மும்முரம் காட்டிய தேசிய ஜனநாயக கூட்டணி பிரதமர் மோடி தலைமையில் புதிய அரசு ஆட்சி அமைக்க குடியரசு தலைவரிடம் உரிமை கோரியது.

இதை ஏற்றுக் கொண்ட குடியரசு தலைவர் திரவுபதி முர்மு நரேந்திர மோடியை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார். இதைத் தொடர்ந்து குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

பிரதமர் மோடியை தொடர்ந்து 72 பேர் மத்திய அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். இந்த நிலையில், மூன்றாவது முறையாக பிரதமர் பதவியேற்றுக் கொண்ட பிரதமர் மோடிக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "இந்தியாவின் பிரதமராக மூன்றாவது முறை பதவியேற்றுக் கொண்ட திரு. நரேந்திர மோடிக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்," என குறிப்பிட்டுள்ளார். 

X

Maalai Malar
www.maalaimalar.com