சுற்றுலா பயணிகள் கடற்கரைக்கு செல்ல தடை- தூத்துக்குடி கலெக்டர் உத்தரவு

கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். கடலோரப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் தேவையான முன்னெச்சரிக்கை மேற்கொள்ளவும் அறிவுத்தல்,
சுற்றுலா பயணிகள் கடற்கரைக்கு செல்ல தடை- தூத்துக்குடி கலெக்டர் உத்தரவு
Published on

கன்னியாகுமரி மாவட்டத்தில் 10.06.2024 மற்றும் 11.06.2024 ஆகிய நாட்களில் அனைத்து கடற்கரைகளிலும் கடல் சீற்றம் இயல்பைவிட அதிகமாக இருப்பதாக தேசிய பெருங்கடல் தகவல் சேவை மையம் மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும், சுற்றுலாப் பயணிகள் எவரும் கடற்கரைப் பகுதிக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும், கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இதைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டரும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது,

தூத்துக்குடி கடற்கரை பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கடற்கரைக்கு செல்ல தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மீனவர்கள், கடலோரப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் தேவையான முன்னெச்சரிக்கை மேற்கொள்ளவும் அறிவுத்தல் வழங்கி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com