சமத்துவத்தை போற்றுவதுதான் திராவிட மாடல்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சிறுபான்மை மக்களுக்கு எதிராக பல திட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றி வருகிறது.நலத்திட்டங்களை நிறைவேற்றுவதால்தான் மக்கள் நல அரசாக திமுக அரசு திகழ்கிறது.
சமத்துவத்தை போற்றுவதுதான் திராவிட மாடல்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
Published on

சென்னை டான் போஸ்கோ பள்ளியில் திமுக சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு சார்பில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது:-

சமத்துவத்தை போற்றுவதுதான் திராவிட மாடல். எந்த மதமாக இருந்தாலும் அது அன்பை, சகோதரத்துவத்தை போதிக்க வேண்டும். திராவிட மாடல் என்றால் என்ன என்று கேட்பவர்களுக்கு இதுதான் பதில். இறைவனை வேண்டுவது அவரவர் விருப்பம். பாகுபாடு எதிலும் நிலவக்கூடாது.

37 தேவாலயங்களை புனரமைக்க ரூ.1.63 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஜெருசலேம் புனித பயணம் செல்வோருக்கு ரூ.37 ஆயிரம் நிதி நேரடியாக வழங்கப்படுகிறது.

நாள்தோறும் நலத்திட்டங்கள், திறப்பு விழாக்கள் என அரசு பல திட்டங்களை நிறைவேற்றுகிறது. நலத்திட்டங்களை நிறைவேற்றுவதால்தான் மக்கள் நல அரசாக திமுக அரசு திகழ்கிறது.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நின்றது திமுக அதை ஆதரித்தது அதிமுக சிறுபான்மை மக்களுக்கு எதிராக பல திட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றி வருகிறது. அதனால்தான் தேர்தலில் பா.ஜ.க.வை மக்கள் சிறுபான்மை அரசாக்கி இருக்கிறார்கள்.

வெறுப்பு அரசியலைக் கண்டு அஞ்சக் கூடாது. சகோதரர் என்ற உணர்வோடு உங்களுக்கு துணையாக நாங்கள் உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com