என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கோமியம் குடித்தால் டாஸ்மாக் விற்பனை குறையும்- தமிழிசை சவுந்தரராஜன்
- மாட்டுக்கறியை சாப்பிடுவர், மாட்டு சாணத்தை பயன்படுத்துவர்.
- ஆயுர்வேதத்தில் மருந்தாக பயன்படும் கோமியத்தை பயன்படுத்தக்கூடாது என பேசுகின்றனர்.
சென்னை:
மாட்டு கோமியம் குடிப்பது நல்லது என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையாகி உள்ளது. பலரும் அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் புத்தக வெளியீட்டு விழாவில் பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது:
* கோமியம் குடித்தால் டாஸ்மாக் விற்பனை குறைந்து விடும் என நினைக்கிறார்கள்.
* மாட்டுக்கறியை சாப்பிடுவர், மாட்டு சாணத்தை பயன்படுத்துவர். மாட்டின் கோமியம் மருந்து என்றால் எதிர்க்கிறார்கள்.
* விஞ்ஞானப்பூர்வமாக ஆராய்ந்து ஆயுர்வேதத்தில் மருந்தாக பயன்படும் கோமியத்தை பயன்படுத்தக்கூடாது என பேசுகின்றனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
Next Story






