

திருவள்ளூர் அருகே உள்ள திருவூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பலர் தங்களது தலைமுடியை ஸ்டைலாக வெட்டி இருந்தனர். கோடு போடுதல், பாக்ஸ் கட்டிங், வி ஒன் சைடு, வி கட்டிங் என்று விதவிதமான தலைமுடி அலங்காரத்தில் வந்தனர்.
இதையடுத்து ஸ்டைலாக வந்த மாணவர்களை ஒன்றாக அழைத்த ஆசிரியர் அனைவருக்கும் பள்ளி வளாகத்திலேயே அவர்களுக்கு தலைமுடியை சீராக வெட்ட ஏற்பாடு செய்தார். மாணவர்கள் வரிசையாக சோகத்துடன் அமர்ந்து தலைமுடியை வெட்டிக் கொண்டனர்.