10 நாட்களாக வெள்ளம் வடியாததால் 200 குடும்பத்தினர் தவிப்பு

சில இடங்களில் 2 அடி முதல் 5 அடி வரை தண்ணீர் உள்ளது.ஷாலோம் நகரில் 5 அடி தண்ணீர் சூழ்ந்துள்ளது.
10 நாட்களாக வெள்ளம் வடியாததால் 200 குடும்பத்தினர் தவிப்பு
Published on

திருச்செந்தூர்:

தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த கனமழையால் மாவட்டம் முழுவதும் பெரும் பாதிப்புக்கு உள்ளானது. மெஞ்ஞானபுரம் பகுதியில் கனமழையால் மெஞ்ஞானபுரம் ஷாலோம் நகர், விஜி குமரன் நகர், கல்விளை, திருப்பணி ஆகிய பகுதிகளில் சடையநேரி குளம் உடைந்ததால் வெள்ளம் புகுந்தது.

சுமார் 5 அடியில் இருந்து 10 அடி வரை தண்ணீர் சூழ்ந்திருந்தது. தற்போது தண்ணீர் வடிய தொடங்கி உள்ளது. சில இடங்களில் 2 அடி முதல் 5 அடி வரை தண்ணீர் உள்ளது.

தற்போது ஷாலோம் நகரில் 5 அடி தண்ணீர் சூழ்ந்துள்ளது. தற்போது இந்த பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளதால் சுமார் 200-க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளில் குடியிருக்க முடியாமல் உயரமான பகுதியில் உள்ள தங்கள் உறவினர்கள் வீடுகளில் தங்கி உள்ளனர்.

சிலர் பாதுகாப்பான இடங்களில் தங்கி உள்ளனர். சிலர் நிவாரண முகாம்களில் தங்கி உள்ளனர். மெஞ்ஞானபுரம் போலீஸ் நிலையம் தண்ணீரில் மூழ்கி அனைத்து ஆவணங்களும் சேதமானது. இன்று வரை போலீஸ் நிலையம் எதிரே உள்ள தனியார் கட்டிடத்தில் தற்காலிகமாக இயங்கி வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com