"ஆதவ் உறவினர் போதைப்பொருள் கடத்தல் Mastermind என பேசியதால் மாரிதாஸ் கைதா?" - அதிமுக கேள்வி

செய்தி நிறுவனங்கள் கேள்வி கேட்டால் Black Out பண்ணுவீங்க
"ஆதவ் உறவினர் போதைப்பொருள் கடத்தல் Mastermind என பேசியதால் மாரிதாஸ் கைதா?" - அதிமுக கேள்வி
Published on

முதல்வர் விஜய், அவர் தலைமையிலான தவெக அரசு, தவெக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் குறித்து தொடர்ந்து பல குற்றச்சாட்டுகளை வைத்து வந்தவர் பிரபல யுடியூபர் மாரிதாஸ்.

அவர் அவதூறு பரப்புவதாகவும் உண்மைக்கு புறம்பானவற்றை பேசி வருவதாகவும் தவெகவினர் குற்றம்சாட்டி வந்தனர்.

இந்நிலையில் 10க்கும் மேற்பொப்பட்ட சென்னை சைபர் கிரைம் போலீசார் மதுரையில் தனது வீட்டில் இருந்த மாரிதாஸை இன்று காலை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

அவர் சென்னை அழைத்துவரப்பட்ட விசாரணைக்கு உட்படுத்தப்பட உள்ளார்.

இந்நிலையில் மாரிதாஸ் கைதை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன.

அதிமுக இதுகுறித்து வெளியிட்ட அதிகாரப்பூர்வ எக்ஸ் பதவில், "யூட்யூபர் திரு.மாரிதாஸ் அவர்களை கைது செய்ய காவல்துறையினர் அவரது வீட்டின் முன் குவிந்திருப்பதாக செய்திகள் வருகின்றன.

ஜனநாயகத்தில் கருத்து சுதந்திரத்தின் கழுத்தை நெறிக்கும் பாசிச திமுக அரசின்….

Wait a minute…

ஆட்சி மாறி விட்டதோ?

ஆனால், காட்சிகள் மாறாதது ஏன்?

பாசிசம், பாயாசம் என்று வாய்கிழிய டயலாக் பேசியவர்களின் ஆட்சி செய்யும் இந்த நடவடிக்கை என்ன? பாசிசமா? பாயாசமா?

நீங்களும் பிரஸ் மீட் கொடுக்கவும் மாட்டீங்க… செய்தி நிறுவனங்கள் கேள்வி கேட்டால் Black Out பண்ணுவீங்க… யூட்யூப்-ல பேசினால் கைது பண்ணுவீங்க…

What bro… It’s very wrong bro..!!

அப்படி என்ன மாரிதாஸ் பேசினார் என்று பார்த்தால், விஜய் ஒரு பொம்மை முதல்வர் என்று கூறியுள்ளார். மேலும், இன்றைய பொதுப்பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவின் உறவினர் ஜான் பிரிட்டோ என்பவர் அமலாக்கத்துறையால் யால் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் Mastermind என கூறப்பட்டுள்ளது பற்றி பேசியுள்ளார்.

ஆதவ் அர்ஜுனா அவர்களே…

ஜான் பிரிட்டோ உங்கள் உறவினர் தானே? ED ரெய்டில் 258 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் சிக்கியது உண்மை தானே? அதில் உங்கள் நெருங்கிய உறவினர் தான் Mastermind என ED கூறியுள்ளது தானே? தமிழ்நாட்டில் உள்ள சிறு துறைமுகங்களுக்கு நீங்கள் தான் அமைச்சர் என்பதும் உண்மை தானே?

இந்த உண்மைகளை தொடர்பு படுத்தி தானே திரு. மாரிதாஸ் பேசினார்? அதில் உண்மை இல்லை என நீங்கள் நினைத்திருந்தால், அவதூறு வழக்கு தொடுத்திருக்கலாமே? அல்லது, செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளிக்கலாமே?

திரு. மாரிதாஸ் அவர்களை விசாரிக்க வேண்டும் என்றால் நோட்டீஸ் கொடுத்து அழைத்திருக்கலாமே? எதற்கு காவலர்களை அவர் வீட்டின் முன் நிறுத்தி கைது செய்ய துடிக்கிறீர்கள்?

அப்படி என்ன அச்சம்? மடியில் கனமிருப்பதால் வழியில் பயம் இருக்கிறதா?

ஜனநாயகக் குரலை நெறிக்க முயலும் பொய்க்கால் குதிரை அரசின் அராஜகப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.

உடனடியாக திரு. மாரிதாஸ் அவர்கள் மீதான அராஜக நடவடிக்கையை கைவிட வேண்டும் என வலியுறுத்துகிறோம்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com