கணக்கு பாடங்களின் தலைப்புகள் மாற்றம்: இனி கதைகள் வழியே கணித பாடம்!- அமைச்சர் ராஜ்மோகன்

பகுப்பாய்வு மற்றும் சிந்தனைத் திறனை இயல்பாகவே வளர்ப்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
 Minister Rajmohan
Published on

பள்ளி மாணவர்களுக்குக் கணித பாடத்தின் மீதான அச்சத்தைப் போக்கி, சுலபமாகக் கற்றுக் கொடுக்கும் வகையில் கணித பாடங்களின் தலைப்புகளை மாற்றவும், கதைகள் வழியே கணிதத்தைக் கற்பிக்கவும் பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

லைப்புகள் மாற்றம்

மாணவர்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையிலும், ஆர்வம் தூண்டும் வகையிலும் கணித பாடப்புத்தகங்களிலுள்ள சிக்கலான தலைப்புகள் மாற்றி அமைக்கப்பட உள்ளன.

கதைகள் வழியே கணக்கு

உலர்வான சூத்திரங்களாக இல்லாமல், கதைகளின் ஊடே கணிதக் கருத்துகளை விவரிக்கும் (Story-based Learning) புதிய கற்பித்தல் முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

ஆசிரியர்களுக்கான புதிய வழிகாட்டுதல்

புதிய புத்தகங்கள் மற்றும் மாற்றியமைக்கப்பட்ட பாடத்திட்டத்திற்கு ஏற்ப ஆசிரியர்கள் மாணவர்களுக்கு எளிதில் கற்பிக்கத் தேவையான பயிற்சிகளும் மாற்றங்களும் மேற்கொள்ளப்படும்.

கற்றல் திறன் மேம்பாடு

தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி மாணவர்களிடையே கணக்குப் பாடத்தைப் பற்றிய பயத்தை நீக்கி, அவர்களின் பகுப்பாய்வு மற்றும் சிந்தனைத் திறனை இயல்பாகவே வளர்ப்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

மாணவர்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையோடு கணிதத் கருத்துகளைப் பிணைத்துப் புரிந்து கொள்ளவும், மகிழ்ச்சியான சூழலில் பாடங்களைக் கற்கவும் இந்த புதிய பாடத்திட்ட மாற்றம் பெரிதும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com