

பாம்பு, தேள், நாய் மற்றும் பிற விலங்குகள் கடிக்கு சிகிச்சைக்காக, ஆரம்ப சுகாதார நிலையம் உட்பட அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் 24 மணி நேர சிகிச்சையை அரசு வழங்கி வருகிறது. மேலும் விஷக்கடியால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்த நிலையில், பாம்பு கடியை அறிவிக்கக்கூடிய நோயாக (Notifiable Disease) தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் பாம்பு கடி தொடர்பான சிகிச்சை விவரங்களை தமிழக அரசுக்கு தெரிவிக்க வேண்டும்.
பாம்பு கடி தொடர்பான தரவுகளை ஆராய்ந்து பாம்பு கடிக்கு சிகிச்சை அளிப்பதற்கான உட்கட்டமைப்பு வசதிகளை இதன் மூலம் மேம்படுத்த முடியும் என்று கூறப்படுகிறது.