என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    தனியார் பள்ளி மாணவர்கள் சைக்கோ போன்றுதான் இருப்பார்கள்- புதுவை சபாநாயகர் கருத்தால் சர்ச்சை
    X

    தனியார் பள்ளி மாணவர்கள் "சைக்கோ" போன்றுதான் இருப்பார்கள்- புதுவை சபாநாயகர் கருத்தால் சர்ச்சை

    • புதுச்சேரி பல்கலைக் கழக ஆடிட்டோரியத்தில் 2 நாள் சர்வதேச மாநாடு நடைபெற்றது.
    • மாநாட்டில் மத்திய இணையமைச்சர் முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    தனியார் பள்ளிகளின் பாடத்திட்டத்தின் காரணமாக மாணவர்கள் சைக்கோ போன்றுதான் இருப்பார்கள் என்று புதுச்சேரி சபாநாயகர் செல்வம் கூறியுள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    AoH (Academic of Hypnosis) மற்றும் InSPA (Indian School Pysichology Association) இணைந்து புதுச்சேரி பல்கலைக் கழக ஆடிட்டோரியத்தில் 2 நாள் சர்வதேச மாநாட்டை நடத்தியது.

    இந்த மாநாட்டில் மத்திய இணையமைச்சர் முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    அப்போது, புதுவை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் பங்கேற்று பேசினார். அவர் கூறிய கருத்து மாணவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதுகுறித்து புதுவை சபாநாயகர் மேலும் கூறியிருப்பதாவது:-

    தனியார் பள்ளி மாணவர்களின் மனநிலையே வித்தியாசமாக தான் இருக்கும். தனியார் பள்ளிகளின் பாடத்திட்டத்தின் காரணமாக மாணவர்கள் சைக்கோ போன்றுதான் இருப்பார்கள்.

    9 ம் வகுப்பு படிக்கும்போதே 10ம் வகுப்பு பாடத்திட்டத்தை முடித்துவிடுவார்கள். 11ம் வகுப்பு படிக்கும்போதே 12ம் வகுப்பு பாடத்திட்டத்தை முடித்துவிடுவார்கள். அந்த 2 ஆண்டுகளில் மாணவர்களின் மனநிலையை மாற்றிவிடுகின்றனர்.

    அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கற்றல் திறன் குறைவாக இருந்தாலும், உடல் மற்றும் மன ரீதியாக எந்த பாதிப்பும் இருக்காது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×