படகு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்

கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள 23 மீனவர் குப்பங்களில் இருந்து தலா 2 படகுகள் வீதம் 46 படகுகள் இப்போட்டியில் கலந்துக் கொண்டன. 1000 மீனவர்களுக்கு மீன் பிடி கூடை, பொது மக்களுக்கு வேட்டி, புடவை, மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சக்கர சைக்கிள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
படகு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்
Published on

திருப்போரூர்:

காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு சென்னை கோவளத்தில் படகுப்போட்டி நடை பெற்றது. விழாவுக்கு சிறு, குறு நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமை தாங்கினார். திருப் போரூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளரும், ஒன்றியக் குழுத் தலைவருமான எல்.இதயவர்மன் வரவேற்றார்.

கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள 23 மீனவர் குப்பங்களில் இருந்து தலா 2 படகுகள் வீதம் 46 படகுகள் இப்போட்டியில் கலந்துக் கொண்டன. படகுப் போட்டியின் இறுதிப் போட்டியை தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சரும், தி.மு.க. இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்து போட்டியில் வெற்றி பெற்ற கானத்தூர், கோவளம் மற்றும் செம்மஞ்சேரி கிராம மீனவர்களுக்கு கோப்பைகள் மற்றும் பரிசுகளை வழங்கினார்.

இதனை தொடர்ந்து நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் 1000 மீனவர்களுக்கு மீன் பிடி கூடை, பொது மக்களுக்கு வேட்டி, புடவை, மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சக்கர சைக்கிள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, காஞ்சிபுரம் எம்.பி. செல்வம், எம்.எல்.ஏ.க்கள் எஸ்.ஆர். ராஜா, வரலட்சுமி மதுசூதனன், இ.கருணாநிதி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மீ.ஆ.வைத்தியலிங்கம், வீ.தமிழ்மணி, து.மூர்த்தி, ஆர்.டி.அரசு, மாவட்டக்குழு தலைவர்கள் மனோகரன், செம்பருத்தி துர்கேஷ், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் கார்த்திக், ஒன்றியக்குழு துணைத்தலை வர் சத்யா சேகர், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் விஜயகுமார், தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பையனூர் சேகர், செயற்குழு உறுப்பினர் வாசுதேவன், தொகுதி தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பா ளர் எல்லப்பன், கோவளம் கிளை தி.மு.க. செயலாளர் அருள்தாஸ், ஊராட்சி மன்ற தலைவர்கள் நாவலூர் மகாலட்சுமி ராஜாராம், படூர் தாரா சுதாகர், முட்டுக்காடு சங்கீதா மயில்வாகனன், கேளம்பாக்கம் ராணி எல்லப்பன், கானத்தூர் வள்ளி எட்டியப்பன், சிறுசேரி துணைத் தலைவர் ஏகாம்பரம், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் அருண்குமார், சுரேஷ் மற்றும் தி. மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் கோவளம் ஊராட்சி மன்ற தலைவர் சோபனா தங்கம் சுந்தர் நன்றி கூறினார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com