தவெக மாநாட்டுக்கு சென்று மாயமான இளைஞரை தேடும் பணி தீவிரம்- ஐகோர்ட்டில் போலீஸ் தகவல்

மாநாட்டில் சுமார் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள், பொதுமக்கள் என கூடினர்.மாநாட்டிற்கு சென்ற இளைஞரை சென்னை, புதுச்சேரி உள்ளிட்ட பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
தவெக மாநாட்டுக்கு சென்று மாயமான இளைஞரை தேடும் பணி தீவிரம்- ஐகோர்ட்டில் போலீஸ் தகவல்
Published on

சென்னை:

தமிழக வெற்றிக்கழகத்தின் மாநில முதல் மாநாடு அக்டோபர் மாதம் 27-ந்தேதி விக்கிரவாண்டி வி.சாலையில் நடைபெற்றது. தமிழக அரசியலே உற்று நோக்கிய இந்த மாநாட்டில் சுமார் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள், பொதுமக்கள் என கூடினர். இதனால் விக்கிரவாண்டி தொகுதியே ஸ்தம்பித்தது.

இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழக மாநாட்டுக்கு சென்று மாயமான மேகநாதனை மீட்டுத்தரக்கோரி அவரது தந்தை சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார்.

இந்த மனுவை மீதான விசாரணையின் போது, மாநாட்டிற்கு சென்ற இளைஞரை சென்னை, புதுச்சேரி உள்ளிட்ட பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. மாயமானவர் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com