பிளஸ்-1 தேர்வு முடிவு: செங்கல்பட்டு மாவட்டம் 90.85 சதவீதம் தேர்ச்சி

காஞ்சிபுரம் மாவட்டம் 86.98 சதவீதம் தேர்ச்சி பெற்று உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் தேர்வு எழுதிய 28 ஆயிரத்து 249 மாணவ-மாணவிகளில் 24 ஆயிரத்து 165 பேர் தேர்ச்சி பெற்று இருக்கிறார்கள்.
பிளஸ்-1 தேர்வு முடிவு: செங்கல்பட்டு மாவட்டம் 90.85 சதவீதம் தேர்ச்சி
Published on

செங்கல்பட்டு:

பிளஸ்-1 தேர்வு முடிவு இன்று வெளியானது. இதில் செங்கல்பட்டு மாவட்டம் 90.85 சதவீதம் தேர்ச்சி பெற்றது. தேர்வு எழுதிய 28 ஆயிரத்து 106 மாணவ-மாணவிகளில் 25 ஆயிரத்து 535 பேர் தேர்ச்சி பெற்றனர். மாணவர்கள் 87.14 சதவீதம் பேரும், மாணவிகள் 94.14 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்று இருக்கிறார்கள்.

காஞ்சிபுரம் மாவட்டம் 86.98 சதவீதம் தேர்ச்சி பெற்று உள்ளது. மாவட்டத்தில் தேர்வு எழுதிய 14 ஆயிரத்து 22 மாணவ-மாணவிகளில் 12 ஆயிரத்து 196 பேர் தேர்ச்சி பெற்றனர்.

இதேபோல் திருவள்ளூர் மாவட்டத்தில் தேர்வு எழுதிய 28 ஆயிரத்து 249 மாணவ-மாணவிகளில் 24 ஆயிரத்து 165 பேர் தேர்ச்சி பெற்று இருக்கிறார்கள்.

இது 85.54 சதவீதம் தேர்ச்சி ஆகும். அரசு பள்ளிகள் அளவில் செங்கல்பட்டு மாவட்டத்தில் தேர்வு எழுதிய 11 ஆயிரத்து 487 பேரில் 9 ஆயிரத்து 529 பேரும், (82.95 சதவீதம்), காஞ்சிபுரம் மாவட்டத்தில் 7 ஆயிரத்து 816 பேரில் 6 ஆயிரத்து 372 பேர் தேர்ச்சி (81.59 சதவீதம்) பெற்றனர். திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு பள்ளி அளவில் தேர்வு எழுதிய 13 ஆயிரத்து 809 மாணவ-மாணவிகளில் 10 ஆயிரத்து 427 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 75.51 சதவீதம் தேர்ச்சி ஆகும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com