பத்மஸ்ரீ விருது வென்ற பாப்பம்மாள் பாட்டி (109) உயிரிழப்பு

கடந்த 2021 ஆம் ஆண்டு பாப்பம்மாள் பாட்டிக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.பிரதமர் மோடி பாப்பம்மாள் பாட்டியை நேரில் சந்தித்தார்.
பத்மஸ்ரீ விருது வென்ற பாப்பம்மாள் பாட்டி (109) உயிரிழப்பு
Published on

விவசாயத்தில் பங்களிப்பு வழங்கியதற்காக மத்திய அரசின் பத்மஸ்ரீ விருதை வென்ற கோவையை சேர்ந்த பாப்பம்மாள் (109) பாட்டி உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். 100 வயதை கடந்தும் இயயற்கை விவசாயம், ஆரோக்கிய உணவு பழக்கம் என சுறுசுறுப்பாக வலம் வந்தவர் ஆவார்.

சிறு வயது முதலே விவசாயத்தில் ஆர்வம் கொண்டிருந்த பாப்பம்மாள் தனது வாழ்க்கையை விவசாயத்திற்காக அர்ப்பணித்தார். விவசாயத்தை முறையாக கற்றுக் கொள்ள தமிழக வேளான் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். இதே பல்கலைக்கழகத்தில் விவாதக் குழு அமைப்பாளராகவும் இருந்தார்.

விவயாசயத்தில் இவர் செய்த சாதனைகளை பாராட்டும் வகையில் தான் கடந்த 2021 ஆம் ஆண்டு மத்திய அரசு பாப்பம்மாள் பாட்டிக்கு பத்மஸ்ரீ விருது வழங்கியது. கோவையை அடுத்த தேக்கம்பட்டி கிராமத்தில் வசித்து வந்த பாப்பம்மாளை கடந்த 2021 ஆம் ஆண்டு பிரதமர் மோடி கோவை வந்த போது, நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றிருந்தார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com