மின் கட்டணம் அதிகமானால் இப்படித் தான் செலுத்தணும்.. புதிய விதிமுறை

மின்வாரிய அலுவலகத்தில் நேரடியாக மின் கட்டணம் செலுத்த பொது மக்களுக்கு புதிய நிபந்தனை.மின்வாரிய அலுவலகத்தில் செலுத்துவதற்கான அதிகபட்ச தொகை படிப்படியாக குறைக்கப்படும்.
மின் கட்டணம் அதிகமானால் இப்படித் தான் செலுத்தணும்.. புதிய விதிமுறை
Published on

மின்வாரிய அலுவலகத்தில் நேரடியாக மின் கட்டணம் செலுத்த பொது மக்களுக்கு புதிய நிபந்தனை விதித்து தமிழ்நாடு மின் வாரியம் அறிவித்துள்ளது.

ரூ.4000க்கும் அதிகமான மின் கட்டணத்தை மின்வாரிய அலுவலகத்தில் இனி நேரடியாக செலுத்த முடியாது என்றும், ரூ.4000க்கும் அதிகமான மின் கட்டணத்தை இனி ஆன்லைன் மூலமாக மட்டுமே செலுத்த முடியும் என்றும் மின்வாரியம் தெரிவித்துள்ளது.

மேலும், இனி வரும் மாதங்களில் ரூ.3000, ரூ.2000 என மின்வாரிய அலுவலகத்தில் செலுத்துவதற்கான அதிகபட்ச தொகை படிப்படியாக குறைக்கப்படும்.

X

Maalai Malar
www.maalaimalar.com