கோவில் கருவறையில் சமத்துவம் காட்டப்பட வேண்டும்- மு.க.ஸ்டாலின்

கடந்த 3 ஆண்டில் மட்டும் 1000-க்கும் மேற்பட்ட கோவில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது.4181 ஏக்கர் நிலம் மீண்டும் கோவில் பெயரில் பட்டா மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கோவில் கருவறையில் சமத்துவம் காட்டப்பட வேண்டும்- மு.க.ஸ்டாலின்
Published on

சென்னை:

பழனியில் நடைபெறும் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை ஆழ்வார்ப்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள தனது முகாம் அலுவலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

முத்தமிழ் முருகன் மாநாட்டை தொடங்கி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

* நீதிக்கட்சி ஆட்சியில்தான் இந்து சமய அறநிலையத்துறை பாதுகாப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டது.

* பக்தர்கள் உட்பட அனைவரும் விரும்பும் ஆட்சியாக திமுக ஆட்சி உள்ளது. திமுக ஆட்சியை பக்தர்கள், ஆன்மீகப் பெரியவர்கள் பாராட்டி வருகின்றனர்.

* கடந்த 3 ஆண்டில் மட்டும் 1000-க்கும் மேற்பட்ட கோவில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது.

* பழனி, இடும்பன் மலை உள்ளிட்ட பகுதிகளில் ரோப் கார் சேவை அமைக்கப்பட்டுள்ளது.

* அறுபடை வீடுகளுக்கு இதுவரை 813 பக்தர்கள் அரசு சார்பில் அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

* 1,355 திருக்கோவில்களில் திருப்பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. 8,436 கோவில்களில் திருப்பணிகள் நடைபெற்று வருகிறது.

* 756 திருக்கோவில்களில் நாள்தோறும் அன்னதானம் திட்டத்தில் நாளொன்றுக்கு 82,000 பேர் உணவருந்துகின்றனர்.

* 4181 ஏக்கர் நிலம் மீண்டும் கோவில் பெயரில் பட்டா மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

* அறநிலையத்துறை சார்பாக செயல்படுத்தப்பட்ட பல்வேறு திட்டங்களும் நூல்களாக வெளியிடப்பட்டுள்ளது.

* ஆலய வழிபாடுகளில் தமிழ் மொழி முதன்மை பெற வேண்டும்.

* கோவில் கருவறையில் சமத்துவம் காட்டப்பட வேண்டும்.

* அன்பால் உலகம் ஒன்றாகும், அறத்தால் உலகம் நன்றாகும் என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com