போலி பாஸ்போர்ட் விற்பனையில் முக்கிய தரகர் கைது- சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை

தரகரிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.யூடியூப் மூலமாக மாட்டிக்கொள்ளாமல் போலி பாஸ்போர்ட் தயாரித்தது அம்பலம்.
போலி பாஸ்போர்ட் விற்பனையில் முக்கிய தரகர் கைது- சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை
Published on

போலி பாஸ்போர்ட் விற்பனையில் முக்கிய தரகரை கைது செய்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதுதொடர்பாக நடத்திய முதற்கட்ட விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.

இதில், பத்தாம் வகுப்பு கூட படிக்காத நபர்களை போலி பாஸ்போர்ட் மூலம் வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்பியது அம்பலமாகி உள்ளது.

10ம் வகுப்பு படித்து முடிக்காதவர்கள் வெளிநாட்டுக்கு செல்ல, மத்திய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சக அனுமதி அவசியம் ஆகும்.

மும்பை, டெல்லி, ஹைதராபாத் ஆகிய இடங்களில் அலுவலகங்கள் அமைத்து போலி பாஸ்போர்ட், விசா தயாரித்தது தெரியவந்துள்ளது.

யூடியூப் மூலமாக மாட்டிக்கொள்ளாமல் போலி பாஸ்போர்ட் தயாரித்ததாக விசாரணையில் தரகர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com