கரூரில் வருமான வரி அதிகாரிகளை தடுத்த விவகாரம்- தி.மு.க.வைச் சேர்ந்த 8 பேர் கைது

சோதனையிடச் சென்ற அதிகாரிகளின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது.அதிகாரிகளை திமுகவினர் தடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கரூரில் வருமான வரி அதிகாரிகளை தடுத்த விவகாரம்- தி.மு.க.வைச் சேர்ந்த 8 பேர் கைது
Published on

கரூர்:

தமிழக மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினர்கள், நண்பர்களின் வீடுகள் மற்றும் அவருடன் தொடர்புடைய இடங்கள், டாஸ்மாக் ஒப்பந்ததாரர்களின் வீடுகளில் கடந்த வெள்ளிக்கிழமை வருமான வரித்துறை அதிகாரிகள் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர். கரூரில் நடந்த சோதனையின்போது வருமான வரித்துறை அதிகாரிகளை திமுகவினர் தடுத்தனர். இதனால் பிரச்சனை உருவானது. திமுகவினரின் எதிர்ப்பு காரணமாக முதல் நாளில் கரூரில் வருமான வரி சோதனை பாதியில் நிறுத்தப்பட்டது.

கரூர் ராமகிருஷ்ணாபுரத்தில் சோதனையிடச் சென்ற அதிகாரிகளை தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகளின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது. இதையடுத்து அங்கு சோதனைக்குச் சென்ற அதிகாரிகள் பாதுகாப்பு கருதி காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதேபோல் ராயனூரிலும் அதிகாரிகளை திமுகவினர் தடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்தது தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

அந்த புகாரின் அடிப்படையில் ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் நடந்த சம்பவம் தொடர்பாக திமுகவைச் சேர்ந்த 6 பேரும், ராயனூர் சம்பவத்தில் 2 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com