5-ம் ஆண்டு நினைவு தினம்: கருணாநிதி நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

ஓமந்தூரார் வளாகத்தில் உள்ள கருணாநிதி சிலையில் இருந்து நினைவிடம் வரை அமைதி பேரணி நடைபெற்றது.மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
5-ம் ஆண்டு நினைவு தினம்: கருணாநிதி நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை
Published on

சென்னை:

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 5-ம் ஆண்டு நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி தமிழ்நாடு, புதுச்சேரியில் அவரது உருவப்படத்திற்கு கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

சென்னையில் அவரது நினைவிடம் அமைந்துள்ள மெரினா கடற்கரையில் உள்ள நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

இதையொட்டி சென்னையில் தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணியும் இன்று நடைபெற்றது.

அண்ணசாலை ஓமந்தூரர் வளாகத்தில் உள்ள கருணாநிதியின் சிலை அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது படத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதை தொடர்ந்து அவரது தலைமையில் அங்கிருந்து அமைதி பேரணி புறப்பட்டது. இதில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் தலைமைக்கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் உள்பட பல்லாயிரக்கணக்கான தி.மு.க.வினர் பங்கேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் அமைதி பேரணியில் நடந்து சென்றனர்.

இதில் தி.மு.க. பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி., முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, துணைப் பொதுச் செயலாளர்கள் ஐ.பெரியசாமி, பொன்முடி, ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ், கனிமொழி எம்.பி., மு.க.தமிழரசு, ஜெகத்ரட்சகன், டி.கே.எஸ்.இளங்கோவன், அமைச்சர்கள் எ.வ. வேலு, தங்கம் தன்னரசு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், உதயநிதி ஸ்டாலின், தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், சிவசங்கர், பெரியகருப்பன், அனிதா ராதாகிருஷ்ணன், டி.ஆர்.பி.ராஜா, கீதா ஜீவன் உள்ளிட்ட அமைச்சர்கள்,

எம்.எல்.ஏ.க்கள் ஜெ.கருணாநிதி, பல்லாவரம் இ.கருணாநிதி, தாயகம் கவி, ஏ.எம்.வி.பிரபாகரராஜா, எழிலன், பரந்தாமன், இனிகோ இருதயராஜ், எஸ்.ஆர்.ராஜா, அம்பத்தூர் ஜோசப் சாமுவேல், கிருஷ்ணசாமி, தலைமை நிலையச் செயலாளர்கள் பூச்சி எஸ்.முருகன், துறைமுகம் காஜா, மாவட்டச் செயலாளர்கள் நே.சிற்றரசு, மாதவரம் சுதர்சனம், ஆவடி நாசர், கவிஞர் காசி முத்து மாணிக்கம், பகுதிச் செயாளர்கள் மதன் மோகன், கே.ஏழுமலை, பல்லாவரம் இ.ஜோசப் அண்ணாதுரை, பம்மல் வே.கருணாநிதி, ஏ.கே.கருணாகரன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் பல்லாவரம் மு.ரஞ்சன், நித்யா, வழக்கறிஞர் ராஜாராமன், படப்பை மனோகரன், திருநீர்மலை ஜெயக்குமார், பாலவாக்கம் விசுவநாதன், சேப்பாக்கம் பகுதி பொருளாளர் வி.பி.சிதம்பரம், பாபா சுரேஷ் உள்பட ஆயிரக்கணக்கான தி.மு.க.வினர் அமைதி பேரணியில் பங்கேற்றனர்.

இந்த பேரணி மெரினாவில் உள்ள நினைவிடத்திற்கு சென்றடைந்ததும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருணாநிதியின் நினை டத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அவரைத் தொடர்ந்து கட்சி நிர்வாகிகளும் அஞ்சலி செலுத்தினர்.

இதன் பிறகு அண்ணா நினைவிடத்திலும் அவர் அஞ்சலி செலுத்தினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com