வருகிற 25-ந்தேதி பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்கிறார் கமல்ஹாசன்

கடந்த ஜூன் மாதம் மாநிலங்களவை தேர்தல் நடைபெற்றது. தி.மு.க. தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன், மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்.
வருகிற 25-ந்தேதி பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்கிறார் கமல்ஹாசன்
Published on

சென்னை:

மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற மாநிலங்களவை (ராஜ்ய சபா) தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன், மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்.

கமல்ஹாசன், வருகிற 25-ந்தேதி அன்று பாராளுமன்றத்தில் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டு பதவியேற்கவுள்ளார் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

X

Maalai Malar
www.maalaimalar.com