உங்களுடன் மனம் திறந்து உரையாட ஆவலுடன் காத்திருக்கிறேன்..!- அண்ணாமலை

நாளை நண்பகல் 12 மணிக்கு சமூக வலைதளம் மூலமாக மக்களை சந்திக்கிறார் அண்ணாமலை.
உங்களுடன் மனம் திறந்து உரையாட ஆவலுடன் காத்திருக்கிறேன்..!- அண்ணாமலை
Published on

புதிய கட்சி தொடங்குகிறாரா அண்ணாமலை? என்று நாளை நண்பகல் 12 மணிக்கு சமூக வலைதளம் மூலமாக மக்களை சந்தித்து அண்ணாமலை அறிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

சமூக வலைதளங்கள் மூலம் மக்கள் அனைவரையும் சந்தித்து கருத்துக்களை பகிர்ந்து கொள்ள உள்ளதாக அண்ணாமலை பதிவு வெளியிட்டுள்ளார். மனம் திறந்து உரையாடவும், ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

நாளைய தினம் மதியம் 12 மணி அளவில், சமூக வலைத்தளங்கள் மூலம் உங்கள் அனைவரையும் சந்தித்து, கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும், மனம் திறந்து உரையாடவும், ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறேன்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com