கனமழை எதிரொலி- உதவி எண்களை அறிவித்த மாவட்ட ஆட்சியர்கள்

புதுச்சேரியில் 25.11.2024 முதல் 29.11.2024 வரை கன மழை பெய்யக்கூடும்.மயிலாடுதுறை மாவட்டத்தில் புயல், மழை பாதிப்புகளை உடனடியாக சரிசெய்ய ஏற்பாடுகள் தயார் நிலை.
கனமழை எதிரொலி- உதவி எண்களை அறிவித்த மாவட்ட ஆட்சியர்கள்
Published on

வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இது 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறும் எனசென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால், அடுத்த 4 தினங்களுக்கு வட தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும், மேலும், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கனமழை எதிரொலியால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

அதன்படி புதுச்சேரி ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரியில் 25.11.2024 முதல் 29.11.2024 வரை கன மழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேற்படி, கன மழையை எதிர்கொள்ள பேரிடர் மேலாண்மைத் துறையின் உதவி அழைப்பு எண்களான 112 மற்றும் 1077 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு பொதுமக்கள் தங்களின் புகார்களை தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.

மேலும், பொது மக்களின் நலன் கருதி பிரத்தியேகமாக மெசேஜ் வடிவிலான புகார்களை மட்டும் பதிந்திட 9488981070 என்கிற வாட்ஸ் அப் எண்ணினை பயன்படுத்திக் கொள்ளலாம்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

புயல் எச்சரிக்கையை தொடர்ந்து, காரைக்கால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அம்மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். மேலும், காரைக்கால் மாவட்ட ஆட்சியர் கூறுகையில், " அத்தியாவசிய பொருட்களை முடிந்தளவு வாங்கிக் கொள்ளவும். பொருட்களை பாதுகாப்பான இடங்களில் வைக்கவும். உதவிக்கு 1070, 1077, 04368227704, 228801 ஆகிய எண்களை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்" என்றார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் புயல், மழை பாதிப்புகளை உடனடியாக சரிசெய்ய ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மேலும் அவர், " மொத்தமாக 4,500 முதல்நிலை மீட்புக்குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். மிக அதிகமாக பாதிக்கும் 12 இடங்கள், அதிகமாக பாதிக்கும் 33 இடங்களை கண்டறிந்து நடவடிக்கை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால், மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம். படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை பாதுகாப்பாக வைக்கவும்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் மழை சேதம் தொடர்பான புகார்களு்கு 1077 மற்றும் 04364- 222588 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்" என்றார்

X

Maalai Malar
www.maalaimalar.com