முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மீதான குட்கா வழக்கு- சிறப்பு கோர்ட்டுக்கு மாற்றம்

சிபிஐ நீதிமன்ற நீதிபதி ஏழில் வளவன் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றம்.
முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மீதான குட்கா வழக்கு- சிறப்பு கோர்ட்டுக்கு மாற்றம்
Published on

முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மீதான குட்கா வழக்கு விசாரணையை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கின் விசாரணை சிறப்பு நீதிமன்றத்தில் வரும் ஆகஸ்ட் 2ஆம் தேதி மீண்டும் நடைபெறுகிறது.

தமிழகத்தில் தடையை மீறி அதிகாரிகளுக்கு லஞ்சம் அளித்து குட்கா பொருள்கள் விற்கபடுவதாக புகாரில் டெல்லி சிபிஐ காவல்துறை வழக்கை விசாரித்து வருகின்றது.

முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, முன்னாள் டிஜிபி உள்ளிட்டோர் மீது சிபிஐ குற்றப்பத்திகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு சிபிஐ நீதிமன்ற நீதிபதி ஏழில் வளவன் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

பின்னர் வழக்கில் முன்னாள் மற்றும் இன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளதால் வழக்கு விசாரணை சென்னையில் உள்ள பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com