திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள இறைச்சிக் கூடங்களை மூட அரசு உத்தரவு

புளியந்தோப்பு, வில்லிவாக்கம், சைதாப்பேட்டை மற்றும் கள்ளிக்குப்பம் ஆகிய இறைச்சிக் கூடங்கள் மூடப்படவுள்ளன.வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள இறைச்சிக் கூடங்களை மூட அரசு உத்தரவு
Published on

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு நாளை மறுநாள் (ஜனவரி 15) சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள இறைச்சிக் கூடங்களை மூட அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, வருகின்ற 15.012025 புதன்கிழமை அன்று பெருநகர சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் இயங்கும் புளியந்தோப்பு, வில்லிவாக்கம், சைதாப்பேட்டை மற்றும் கள்ளிக்குப்பம் ஆகிய இறைச்சிக் கூடங்கள் அரசு உத்தரவின்படி மூடப்படவுள்ளன.

எனவே, இறைச்சிக் கடை வியாபாரிகள், பொதுமக்கள் அனைவரும் இந்த உத்தரவினை செயல்படுத்த முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com