விளையாட்டுத் துறையின் தலைநகராக தமிழகத்தை மாற்றுவோம்- துணை முதலமைச்சர்

தலைசிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளை தமிழகத்தில் உருவாக்குவோம்.மக்களுக்கான திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறோம்.
விளையாட்டுத் துறையின் தலைநகராக தமிழகத்தை மாற்றுவோம்- துணை முதலமைச்சர்
Published on

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் விழாவில் பங்கேற்ற துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மதுரை மாவட்ட விளையாட்டு வளாகத்தில் ஒலிம்பிக் அகாடமி கட்டும் பணிக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு சாம்பியன்ஸ் கிட் தொகுப்பையும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விடுதியில் தங்கி பயில்வோருக்கு சாம்பியன்ஸ் கிட் உதவி பொருட்கள் தொகுப்பையும் அவர் வழங்கினார்.

இதைத்தொடர்ந்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் பேசியதாவது:

* தலைசிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளை தமிழகத்தில் உருவாக்குவோம்.

* விளையாட்டு துறையின் தலைநகராக தமிழகத்தை மாற்றுவோம்.

* விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு திராவிட மாடல் அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது.

* மக்களுக்கான திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com