விளையாட்டு மேம்பாட்டு துறையில் துணை முதலமைச்சர் உதயநிதியின் சாதனைகள்

மாநில அரசால் 76 புதிய பயிற்றுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கம் ரூ.25 கோடியில் புனரமைக்கப்பட்டன.
விளையாட்டு மேம்பாட்டு துறையில் துணை முதலமைச்சர் உதயநிதியின் சாதனைகள்
Published on

சென்னை:

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளையாட்டு மேம்பாட்டு துறையில் செய்த சாதனைகளை அரசு செய்தி குறிப்பு மூலம் பட்டியலிட்டு உள்ளது.

சர்வதேச மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர், வீராங்கனைகள் உள்ளிட்ட 3,345 வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.104.22 கோடி உயரிய ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டுள்ளது.

விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கத் தொகை ரூ.25 லட்சத்தை ரூ.30 லட்சமாக உயர்த்தியதோடு பயனாளிகளின் எண்ணிக்கை 12 லிருந்து 27-ஆக இரட்டிப் பாக்கப்பட்டுள்ளது.

மாநில அரசால் 76 புதிய பயிற்றுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த முயற்சியின் வழிவகையில், 4 உயர் செயல்திறன் கொண்ட வெளிநாட்டு பயிற்றுநர்கள், 5 நிபுணத்துவம் வாய்ந்த பயிற்றுநர்கள் மற்றும் 2 பாரா விளையாட்டு பயிற்றுநர்கள் சர்வதேச அளவிலான பயிற்சி அளிப்பதற்காக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டின் 12600 கிராம பஞ்சாயத்துகளுக்கு டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் திட்டத்தின் கீழ் ரூ.85.99 கோடி செலவில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படுகின்றன.

ஒவ்வொரு தொகுப்பிலும் கிரிக்கெட், கால்பந்து, கைப்பந்து, துரோபால், கபடி, செஸ், கேரம், பூப்பந்து, டென்னிகாய்ட் மற்றும் சிலம்பம் போன்ற பல்வேறு விளையாட்டுகளுக்கான 33 வெவ்வேறு விளையாட்டு உபகரணங்களைக் கொண்டு உள்ளது.

அனைத்து நவீன விளையாட்டரங்கங்கள் மற்றும் மாவட்ட விளையாட்டரங்கங்கள் ரூ.5.30 லட்சத்தில் புனரமைக்கப்பட்டது.

கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள்-2023-ஐ சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் நடத்துவதற்காக செயற்கை இழை தடகளப்பாதை ரூ.8.64 கோடியில் மறுசீரமைக்கப்பட்டது.

சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கம் ரூ.25 கோடியில் புனரமைக்கப்பட்டன.

பாரீஸ் ஒலிம்பிக் 2024ல் தகுதி பெற்ற ஒவ்வொரு விளையாட்டு வீரர்களுக்கும் சிறப்பு ஊக்க தொகையாக ரூ.7 லட்சம் வழங்கப்பட்டது.

போட்டிகளில் பதக்கம் வென்ற 4 விளையாட்டு வீரர்களுக்கு ரூ.5 கோடி உயரிய ஊக்க தொகை வழங்கப்பட்டது.

இந்திய வரலாற்றில் முதன்முறையாக தமிழ்நாட்டில், மாமல்லபுரத்தில் மிகச் சிறப்புடன் நடைபெற்ற 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 186 நாடுகளைச் சார்ந்த 2000-க்கும் மேற்பட்ட சதுரங்க விளையாட்டு வீரர் - வீராங்கனைகள் பங்கேற்றனர்.

2024-ம் ஆண்டில் சதுரங்க போட்டியை கடந்த 5-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை நடத்தியது. இதில் 8 சர்வதேச கிராண்ட் மாஸ்டர்கள் மற்றும் 8 இந்திய கிராண்ட் மாஸ்டர்கள் உட்பட இந்த நிகழ்வு உலக அளவில் கவனத்தை ஈர்த்தனர். மொத்த பரிசுத் தொகை ரூ.70 லட்சம் ஆகும். மேலும், இப்போட்டி களை நடத்துவதற்காக ரூ.2.61 கோடி வழங்கப்பட்டது.

இந்தியாவின் முதல் நைட் ஸ்ட்ரீட் சர்க்யூட் கார் பந்தயத்தை சென்னையில் நடத்தியது. இப்போட்டி நடத்தியதன் மூலம் தெற்காசியாவிலேயே முதல் நகரமாகவும் ஒரே நகரமாகவும் சென்னை திகழ்கிறது. இப்போட்டி சென்னையில் தீவுத் திடலைச் சுற்றி நடைபெற்றது. இது இந்தியா மற்றும் தெற்காசியா விலேயே மிக நீளமான சுற்று ஆகும். இப்போட்டிகளை நடத்துவதற்காக ரூ.40 கோடி வழங்கப்பட்டது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com