தடைகளைக் கடந்து தரவுகளைச் சேகரிக்கிறோம்- அகழாய்வு குறித்து மு.க. ஸ்டாலின் எக்ஸ் பதிவு

பயணம் சரியான திசையில் செல்வதை உறுதிசெய்கிறது.நம் முழக்கம் மெய்ப்படப் பணிகளைத் தொடர்வோம்.
தடைகளைக் கடந்து தரவுகளைச் சேகரிக்கிறோம்- அகழாய்வு குறித்து மு.க. ஸ்டாலின் எக்ஸ் பதிவு
Published on

முதலமைச்சர் மு க ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது,

மூடியுடன் பானை, பாசிமணிகள், சுடுமண் கிண்ணங்கள் - தொட்டி, உறைகிணறு, வெள்ளியிலான முத்திரைக் காசு, சிவப்பு வண்ணக் கொள்கலன், தமிழி பானை ஓடு, இரும்பிலான ஏர்க்கலப்பையின் கொழுமுனை, தக்களி, தந்தத்தாலான பகடைக்காய், சுடுமண் சிற்பம், உணவுக் கிண்ணம், செம்பினாலான அஞ்சனக்கோல் - ஆணி என இப்படித் தொடர்ந்து அகழாய்வுகளில் கண்டுபிடிக்கப்படும் பொருட்கள், தமிழரின் வரலாற்றையும் பண்பாட்டையும் அறிவியல் சான்றுகளுடன் உலகுக்கு எடுத்துக்கூற நாம் மேற்கொண்டுள்ள பயணம் சரியான திசையில் செல்வதை உறுதிசெய்கிறது!

இந்தியத் துணைக்கண்ட வரலாறு தெற்கிலிருந்து தொடங்கி எழுதப்பட வேண்டும் என்ற நம் முழக்கம் மெய்ப்படப் பணிகளைத் தொடர்வோம்! என்று கூறியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com