சென்னை சென்ட்ரல்-அரக்கோணம் இடையே ரெயில் சேவை பாதிப்பு சரி செய்யப்பட்டது

சென்ட்ரல் - திருவள்ளூர் இடையேயான மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. கோளாறை சரி செய்யும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர்.
சென்னை சென்ட்ரல்-அரக்கோணம் இடையே ரெயில் சேவை பாதிப்பு சரி செய்யப்பட்டது
Published on

சென்னை சென்ட்ரல் - ஆவடி இடையேயான மின்சார ரெயில் சேவை இன்று (ஆகஸ்ட் 30) மாலை பாதிக்கப்பட்டது. சென்னை சென்ட்ரல் - திருவள்ளூர் இடையேயான மின்சார ரெயில் சேவையும் பாதிக்கப்பட்டது.

சென்னை வியாசர்பாடி ரயில் நிலையம் அருகே உயர் மின் அழுத்த கம்பி பழுது காரணமாக மின்சார ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக சென்னை - அரக்கோணம் மார்க்கத்தில் ரயில் சேவை பாதிக்கப்பட்டது.

கோளாறு ஏற்பட்டத்தை அடுத்து ரெயில்வே அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு, பாதிப்பை சரி செய்தனர். இதன் காரணமாக சுமார் அரை மணி நேரம் வரை ரெயில்கள் இயக்கப்படவில்லை. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். தற்போது கோளாறு சரி செய்யப்பட்டு வழக்கம்போல் ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

X

Maalai Malar
www.maalaimalar.com