உயர்சிறப்பு மருத்துவ படிப்பு இட விவகாரம்: உண்மைக்கு மாறான தகவலை உதயநிதி கூறுகிறார் - அருண்ராஜ்

151 மருத்துவ இடங்களை மத்திய அரசிடம் சரண்டர் செய்ய தவெக அரசு மறுத்தது.
உயர்சிறப்பு மருத்துவ படிப்பு இட விவகாரம்: உண்மைக்கு மாறான தகவலை உதயநிதி கூறுகிறார் - அருண்ராஜ்
Published on

மருத்துவ உயர் படிப்பில் 151 இடங்களை மத்திய அரசிடம் சரண்டர் செய்யக்கூடாது என்று எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி முதலமைச்சர் விஜய்க்கு கடிதம் எழுதி இருந்தநிலையில் இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் அருண் பதில் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில்,

* திமுக ஆட்சியில் மருத்து இடங்களில் மீள் வழங்கப்பட்டன.

* 2024-ல் 119 இடங்களும், 2025-ல் 145 இடங்களும் சரண்டர் செய்யப்பட்டன.

* நிரப்பப்படாத இடங்களை சரண்டர் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

* 151 மருத்துவ இடங்களை மத்திய அரசிடம் சரண்டர் செய்ய தவெக அரசு மறுத்தது.

* 2025-ல் நிரப்பாத 152 இடங்கள் இந்திய தொகுப்பிற்கு செல்வது தடுக்கப்பட்டதாக உதயநிதி கூறியது உண்மைக்கு புறம்பானது.

* 151 இடங்களை மீள் வழங்க உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

* நம் மாநிலத்திற்கு ஒதுக்கிய இடங்களை தமிழக மருத்துவர்கள் மூலம் நிரப்ப வேண்டும் என்பதே முதலமைச்சர் நிலைப்பாடு.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com