

We The Leaders இயக்கத்தின் நிறுவனர் அண்ணாமலை இன்று சமூக வலைத்தளமான யூடிபில் திடீரென நேரலையில் வந்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* We The Leaders இயக்கம் அரவக்குறிச்சியில் இருந்து ஆரம்பிக்கப்பட்டது. இந்த இயக்கமானது மக்களுக்கானது, அரசியலுக்கானதல்ல.
* மாற்றத்தை நோக்கி செல்கிறோம். மாற்றம் அடிப்படையில் இருந்து மேற்கொள்ள வேண்டும்.
* கரூரில் இருந்து பணிகளை தொடங்கி உள்ளோம். எல்லா மதத்திற்கும் நான் சமமாக இருப்பவன்.
* மக்கள் இயக்கமாக மாற்ற, அரசியல் இயக்கமாக மேம்படுத்த உருவெடுக்க உள்ளது.
* எனது இயக்கத்திற்கு வருமாறு யாரையும் அழைக்கவில்லை. என்னுடன் வருமாறு பாஜகவினர் யாருக்கும் அழைப்பு விடுக்கவில்லை.
* We The Leaders இயக்கத்தில் தற்போது வரை 18 லட்சம் பேர் இணைந்துள்ளனர். என் அறைகூவலை ஏற்று இயக்கத்தில் இணைந்த சகோதர, சகோதரிகளுக்கு நன்றி.
* மக்களாக வந்து இணையும் போது அனைவரையும் வரவேற்பேன். OTP அடிப்படையில் உறுப்பினர்களை சேர்க்கும் ஒரே இயக்கம் We The Leaders.
* We The Leaders இயக்கத்தை சரியான பாதையில் கொண்டு செல்வேன்.
* ஜூலை மாதம் முதல் அரசியல் நடவடிக்கைகள் துவங்கும்.
* எனது இயக்கத்திற்கு தாமாக இளைஞர்கள் வரவேண்டும் என எதிர்பார்த்தேன்.
* வீ த லீடர்சில் ஆயிரக்கணக்கானவர்கள் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்தனர்.
* லட்சக்கணக்கானவர்கள் தேர்தலில் போட்டியிட விருப்பம் இல்லை என கூறியுள்ளனர்.
* போதைப்பொருள் புழக்கத்திற்கு எதிராக மக்களை ஒருங்கிணைப்போம் என்றார்.